Thursday, 3 October 2024

காருகுறிச்சி அருணாசலம் பிள்ளைவாள் தந்த தாலிக்கொடி பரிசு

காருகுறிச்சி அருணாசலம் பிள்ளைவாள் தந்த - தாலிக்கொடி பரிசு 

(படித்ததில் பிடித்தது)

வேம்பு அய்யர் போளி

வேம்பு அய்யர் அந்த நாட்களில் திருநெல்வேலி சீமையில உள்ள மணியாச்சி ரயில் நிலையத்தின் நடைமேடையில் தன் வழக்கமான இடத்துக்குச் சென்று கூடையை இறக்கி வைத்தார்.

மணியாச்சி ரயில் நிலையம் ஞாபகம் இருக்கா ? வாஞ்சி அய்யர் ஆஷ் துரையை இங்கே சுட்டுக்கொன்ற இடம் தான் இன்று வாஞ்சி மணியாச்சி ஆயிற்று.

ஸ்டேஷன் மாஸ்டரின் அலுவலகத்துக்குச் சென்று சிறிய மேஜை ஒன்றைத் தூக்கிவந்து கூடைக்குஅருகில்வைத்தார். மேஜையின்மேல் வெள்ளைத் துணியை விரித்து அதன் மேல் மந்தாரை இலைகளைப் பரப்பினார். அதன் பின் கூடையில் கொண்டு வந்திருந்த கடம்பூர் போளிகளை ஒவ்வொன்றாக எடுத்து இலைகளின் மேல் அடுக்கி வைத்தார்.

 அவர்வாய் முனக அன்று மோகன ராகத்தை எடுத்துக் கொண்டது.  அத்தனை போளிகளையும் எடுத்து வைத்த வுடன்,வெறும் கூடையைஎடுத்துக் கொண்டு ஸ்டேஷன் மாஸ்டரின் அலுவலகத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

இன்னும் ரயில் வர அரை மணி இருந்தது. மோகனத்தின் தைவதத்தின் சௌந்தர்யத்தை வியந்தபடி அவர் நடக்கும் போது எதிரில் யாரோ வருவதுபோலத் தோன்றியது. வருபவர் வேம்புவை நோக்கி கையை ஆட்டிக் கொண்டிருந்தார். ஆள் நெருங்கி யதும் வருபவர் பெரிய அருணாசலம் என்று தெரிந்தது. 

நாதசுவர வித்வான் காருகுறிச்சி அருணாசலத்தின் உடன் பிறவா சகோதரர். இருவர் ஊரும் பெயரும் ஒன்று என்பதால் இவர் பெரிய அருணாசலம்.



 இரண்டு அருணா சலங்களுக்கும் கடம்பூர் போளி என்றால் உயிர். அதிலும் வேம்பு அய்யர் கொண்டு வந்து விற்கும் போளி துணைக்கு வரும் என்றால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் ரயிலில் செல்லத் தயாராக இருப்பார்கள். இவ்விருவரும் பழக்கிவிட்டதில் மொத்த நாக ஸ்வரக் குழுவுமே இந்த போளிகளுக்கு அடிமை.

 அருணாசலம் கச்சேரிக்காக ரயிலில் மணியாச்சி வழியாகச் செல்லும் போதெல்லாம் அவசர அவசரமாக ஒரு பையன் முதல் கிளாஸிலிருந்து ஓடி வருவான்.  அவனைப் பார்த்ததுமே இலைகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைக்கத் தொடங்குவார் வேம்பு அய்யர். ஒவ்வொரு இலைகளிலும் பத்து போளிகள் இருக்கக்கூடும். அவன் வந்ததும் அவர் கைகளில் உள்ள இலைகளை அவன் கைக்கு மாற்றிவிட்டு. “ஓடுலே! ஓடுலே!”, என்று பையனை விரட்டுவார்.

 ஒவ்வொரு முறை அவர் இப்படிச் செய்யும் போதும் போளி விற்றதில் வரும் அவருடைய அந்த வாரப் பங்கைத் தாரை வார்க்க நேரிடும். அவர் மனைவி சுந்தரி எப்படியும் இழுத்துப்பிடித்துச்சமாளித்துவிடுவாள் என்று அவருக்குத் தெரியும். சமாளிக்க முடியவில்லை என்றாலும் அருணா சலத்திடம் பணம் கேட்கமாட்டார் வேம்பு அய்யர்.

அவரைப் பொருத்த மட்டில் அந்த மண்ணின் பெருமையே அருணாசலம்தான். சங்கீதம் என்றாலே தஞ்சாவூர் ஜில்லா என்ற நிலையை மாற்ற திரு நெல்வேலி ஜில்லா வில் அவதாரம் செய்த கந்தர்வன் தான் அருணாசலம் என்பது அவர் துணிபு.

திருச்செந்தூர் பச்சை சாற்றி திருக்குறுங்குடி உற்சவம், சுசீந்தரத்தில் ஆறாம் திருநாள் என்று அருணா சலம் வாசிக்கும் இடங்களில் எல்லாம் வேம்பு அய்யரை நிச்சயம் பார்க்கலாம்.  

எவ்வளவு கூட்டம் இருந்தாலும் இவர் வந்தால் அருணா சலத்துக்குத் தெரிந்துவிடும். வேம்பு அய்யரை அழைத்து முதல் வரிசையில் உட்காரச் சொல்லுவார்.  ’அந்த மரியாதைக்கு உயிரையே எழுதி வைக்கலாம். போளி எல்லாம் எம் மாத்திரம்?’ என்று நினைத்துப் புளகாங்கிதம் அடைவார் வேம்பு அய்யர். 

என்றுமில்லாத அதிசயமாய் இன்று ஏனோ ரயில் வராத வேளையில் பெரிய அருணாசலம் வந்திருக்கிறார்.

“இன்னிக்கு ராத்திரி ஒட்டபிடாரத்துல கச்சேரி. போற வழியில மணி யாச்சி போர்டைப் பார்த்ததும் அவாளுக்கு உங்க ஞாபகம் வந்துச்சு. அதான் இங்க வந்தோம். கார் வெளியில நிக்கி.” 

வேம்பு அவசர அவசரமாக ஐந்தாறு இலைகளில் போளியை எடுத்துக்கொண்டு சாலைக்கு ஓடினார்.அவர் வருவதைப் பார்த்ததும் தன் ப்ளைமவுத் காரிலிருந்து இறங்கினார் அருணாசலம். 

“ஒட்டபிடாரத்து லகச்சேரினு தெரியாமப் போச்சே! ராத்திரி வந்துடுவேன்,” என்றபடி கைகளில் இருந்த போளிகளை நீட்டினார் வேம்பு.

 “ஐயர்வாள்! நானும் மாசக்கணக்கா உங்க கிட்ட பேசணும்னு நினைச்சுகிட்டு இருக்கேன். இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பேசிடணும்னுதான் வந்திருக்கேன்,” என்றார் அருணா சலம்.

வேம்பு அய்யருக்கு ஒன்றும் புரிய வில்லை. அவர் கைகள் இன்னும் இலைகளை நீட்டிக் கொண்டிருந்தன.

 அதை வாங்காமல் அருணாசலம் தொடர்ந்தார். 

“ஒவ்வொரு தடவை நம்ம பய வரும் போதும் நீங்க பாட்டுக்கு போளியைக் குடுத்துட்டு துரத்திவிட்டுரீய, அவம் பணத்தை நீட்டக்கூட விட மாட்டீங்கீய-ங்கான். எப்பவோ ஒரு தடவைன்னா சரிங்கலாம். இதையே வழக்கமா வெச்சுகிட்டா ?”

வேம்பு அய்யர் லேசாகப் புன்னகைத்தார்.

 “நீங்க காசு வாங்கலைன்னா இனிமேல் உங்க கிட்ட போளி வாங்கப் போறதில்ல”

வேம்பு புன்னகை மறையாமல் பேச ஆரம்பித்தார்.

“ஏ...லே!

நீ வாசிக்கற பைரவிக்கும், உசைனிக்கும் உலகத்தையே எழுதி வைக்கலாம். எனக்கு வக்கிருக்கு இந்தப் போளிக்குத் தான். மாசாமாசம் எங்கையாவது வாசிச்சுக் காதைக் குளிர வக்கியே! அது போதாதா? பணம் வேற குடுக்கணு மாங்கேன்?”

“ என்ன சொன்னாலும் இன்னிக்கு எடு படாது. பைசா வாங்கிகிட்டாத்தா இனி உங்க கிட்ட போளி வாங்குவேன்”, என்று பிடிவாதம் பிடித்தார் அருணா சலம்.

 ”இப்ப நான் உன்கிட்ட எதாவது வாங்கிக்கணும். அம்புட்டு தானே?”

 “ஆமா”“அப்ப எனக்கு பணம் வேண்டாம். வேற ஒண்ணு கேக்கேன்.” கொடுப்பீயளோ?

 “என்ன வேணும் னாலும் கேளுங்க”, என்று அவசரப் பட்டார் அருணா சலம்.

 “யோசிச்சுட்டு சொல்லு. அப்புறம் முடியாதுனு சொல்லக் கூடாது” என்று குழந்தை யுடன் பேரம் பேசுவது போலக் கேட்டார் வேம்பு.

 “அதெல்லாம் யோசிச்சாச்சி! உங்களுக்கு வேணுங்கறதைச் சொல்லுங்க.”

 “திருனேலி ஜில்லால ஓங் கச்சேரி நடக்காத ஊரே இல்லைங் காவோ. ஆனால் நீ வாசிக்க ஆரம்பிச்ச இந்த இருபத்தஞ்சு வருஷத்துல இந்த மணியாச்சியில மட்டும் உன் கச்சேரி நடக்கவே இல்லை.

 நான் பொறந்து வளர்ந்த ஊருல உன் நாகஸ் வரத்துல இருந்து ராகம் ஆறா ஓடணும். அது நடந்தாப் போதும். எனக்கு ஜென்ம சாபல்யம்தான்.”

இப்படி ஒரு வேண்டு கோளை அருணாசலம் எதிர் பார்க்கவில்லை.

 “வாசிச்சுட்டாப் போச்சு. உங்க வீட்டுக்கே வந்து வாசிக்கறேன்”

 ”இல்லை! இல்லை!”, தலையைத் தீர்மானமாய் ஆட்டினார் வேம்பு.

 அவர் மனக்கண் முன் பெரிய மேடையில் அருணா சலம் அமர்ந்து வாசிக்க ஆயிரக் கணக்கான ரசிகர் கூட்டம் பந்தலில் உட்கார்ந்து கேட்கும் காட்சி விரிந்து விட்டது.

 “சங்கடஹர சதுர்த்தி அன்னிக்கு இந்த ஸ்டேஷன் பிள்ளையார் கோயில்ல நீ வாசிக்கணும்.” என்று சொல்லி விட்டு கையில் இருந்த போளிகளை அருணாசலத்திடம் கொடுத்துவிட்டு திரும்ப நடை மேடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார் வேம்பு.

 உலகத்தையே ஜெயித்துவிட்டது போல இருந்தது வேம்புவுக்கு.

 “முட்டாப்பயலுவோ! மாணிக்கத்தைக் கையில வெச்சுக் கிட்டு அனுபவிக்கத் தெரியலையே இந்த மூதிகளுக்கு. எவ்வளவு கட்டியாண்டா என்ன?

 ஆபோகியில் மத்யமத்தைத் கம்மலா தொடும் போது வாய்விட்டு ‘ஆமாம்பா’-னு ரசிக்கத் தெரியாதவன் மனுஷனா?”, என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டு நடந்தார் அய்யர்

 அடுத்த நாள் விழித்ததும்தான் தான் எடுத்துக் கொண்டுள்ள காரியத்தின் முழுப் பரிமாணம் அவருக்குப் புலப் படத் துவங்கியது.

 அருணாசலத்துக்கு வேம்புவின்மேல் இருந்த அபி மானத்தால் சம்பாவனையே இல்லாமல் கச்சேரி செய்வான்.

 ஆனால் கச்சேரி நடக்க இன்னும் எத்தனையோ செலவுகள் உண்டே. மேடை போட வேண்டும். ஜனங்கள் உட்கார்ந்து கேட்க பந்தல் போட வேண்டும். ஒலிப் பெருக்கிகளுக்குச் சொல்லவேண்டும்.

 அருணாசலம் கச்சேரி என்றால் எத்தனையோ ஊரிலிருந்து பெரிய பிரமுகர்கள் வருவார்கள் – அவர்கள் உட்கார நாற்காலிகள் வாடகைக்கு எடுக்க வேண்டும். ஊரைக் கூட்டி சாப்பாடு போடாவிடினும், ஆளுக்கு ஒரு கை சுண்டலாவது பிரசாதமாகக் கொடுக்க வேண்டாமா?

 இந்தச் செலவுகளை எல்லாம் எண்ணிப் பார்க்கும் போதே அவருக்குத் தலை சுற்றியது.

 இந்த வார போளிக் கணக்கை கடம்பூருக்குச் சென்று பைசல் செய்தால் கையில் முப்பதைந்து ரூபாய் மிஞ்சும். அதை வைத்து என்ன கச்சேரி நடத்துவது?

 வேம்பு தனக்குத் தெரிந்த ஊர் காரர்களை சென்று சந்தித்து விஷயத்தைச் சொன்னார். இவர் கேட்பதற்கு உதவக் கூடிய ஊரென்றால் இது நாள் வரை அருணாசலம் கச்சேரி அங்கு நடக்காமலா இருந்திருக்கும்?

 பல இடங்களில் தம்படி கூடப் பெயரவில்லை. அருணாசலம் பெயருக்காக சிலர் அஞ்சும் பத்தும் கொடுத்தனர்.  மூன்று நாட்கள் அலைந்ததில் மொத்தம் நூற்றி ஐம்பது ரூபாய் தேறியது. சதுர்த்திக்கு இன்னும் நான்கு நாட்களே இருந்தன.

வேம்பு போளி விற்க ரயிலடிக்குப் போன நேரம் போக வசூல் விஷயமாக யாரையாவது சந்தித்துக் கொண்டே இருந்தார். அவருக்கு ஒன்றும் பெரியதாகத் தேறவில்லை.

 ’அருணாசலம் வேண்டாம் என்பதற்காக வெறும் தேங்காய் மூடியோடா அனுப்ப முடியும்? இன்னும் ஐந்நூறு ரூபாயாவது இருந்தால்தான் ஓஹோவென்று இல்லாவிடினும் ஓரளவவாவது ஒப்பேற்றமுடியும்,’ என்று வெதும்பிய படி வீட்டுக்குள் நுழைந்தார் வேம்பு.

 இரவுச் சாப்பாடு முடிந்ததும் வேம்புவின் மனைவி ஒரு கவரை எடுத்து வந்தாள். அதில் நானூறு ரூபாய் பணமிருந்தது.

 “ஏதிந்தப் பணம்?” என்று வேம்பு கேட்டு முடிக்கும் முன்பே கழுத்தில் கட்டியிருந்த மஞ்சள் கயிரை எடுத்துக் காட்டினாள் சுந்தரி.

 “என்ன சுந்தரி இப்படிப் பண்ணிட்ட? உன் கிட்ட இருந்த ஸ்வர்ணமே அது தானே?அதைப் போய் வெக்கலாமா?”,  என்று தழுதழுத் தார்வேம்பு.

 “உதவிக்கு இல்லாத ஸ்வர்ணம் இருந்தா என்ன? இல்லைன்னா என்ன? ஒரு வாரம நீங்கப் படற வேதனையை என்னால பார்க்க முடியல.”, என்று சலனமேயில்லாமல் கூறினாள் சுந்தரி.

வேம்பு அவள் கைகளை இழுத்து விரல்களைக் கோர்த்துக் கொண்டார்.

 சதுர்த்தியன்று மாலை ஆறு மணிக்கு அருணா சலம் காரில் வந்திறங்கினார். சற்றைக்கெல்லாம் பெரிய அருணா சலம், பெரும் பள்ளம் வெங்க டேசன், அம்பா சமுத்திரம் குழந்தை வேலு முதலான அவர் குழுவினர் பெரிய வண்டியில் வந்து இறங்கினர்.

 வேம்பு அருணா சலத்தின் கையைப் பிடித்துக் கொண்டு பிள்ளையார் சன்னதிக்கு அழைத்துச் சென்றார்.

 குருக்கள் அர்ச்சனை செய்த பின் மாலை முதலான மரியாதைகளை குழுவினருக்குச் செய்தார்.

பந்தலில் கூட்டம் அம்மியது.

 சங்கரன்கோயில், கழுகுமலை, களக்காடு, கடையநல்லூர், சுரண்டை, எட்டையபுரம், புளியங்குளம் என்று அருகில் உள்ள ஊர்களில் இருந்து ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

 அருணாசலம் மேடையேறி உட்கார்ந்த போதே கரகோஷம் ஊரை நிறைத்தது. வேம்பு முதல் வரிசையில் அருணாசலத்துக்கு நேராக அமர்ந்து கொண்டார்.

அருணாசலம் கௌளையை கொஞ்சம் கோடி காட்டிவிட்டு, ‘ப்ரணமாம்யஹம்’ வாசிக்கத் துவங்கினார்.

எடுத்துக் கொண்ட காலாப்ரமாணம் மின்னல் ! புரவிப் பாய்ச்சலில் ஒலித்த தவில்சொற்கள் உந்தித்தள்ள கல்பனை ஸ்வரங்கள் மட்டும் பதினைந்து நிமிடங்களுக்கு பொறி பறந்தன.

 வேம்பு தன்னை மறந்து தலையை ஆட்டி ஆட்டி ரசித்துக் கொண்டி ருந்தார். பாடல் முடிந்ததும் வேம்பு ஒரு நிமிடம் தலையைச் சுழற்றி அமர்ந்திருந்த வர்களைப் பார்த்தார்.

 இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள். ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தா கூட சுந்தரியின் தாலிக்கொடி தப்பியிருக்கும் என்று அவருக்குத் தோன்றியது.

 அருணாசலம் கர் நாடக பெஹாகை வாசிக்க ஆரம்பித்தார்.

“நேனெந்து வெதுகுதுரா”

”வெதுகுதுரா”-வில் அந்தக் குழைவு அவரை என்னமோ செய்தது.

 ‘உன்னை நான் எங்கப் போய் தேடுவேன்’ என்கிற வரியில் அலைந்து திரிந்து களைத்த அத்தனை சோர்வையும் குழைத்துச் சமைத்தது போல அந்த ‘வெதுகுதுரா’ ஒலிப்பது போல வேம்புவுக்குப்பட்டது.

“உண்மைதானே! என் குரலுக்கு அகப்படறவனா இருந்தா இப்படித் தாலிக் கொடியை வெச்சு இந்தக் கச்சேரி வெக்கற நிலைமைலையா என்ன வெச்சுருப்பான்?”  வேம்புவுக்கு கண்கள் கலங்கின.  தலையைக் கவிழ்த்துக் கொண்டு துண்டை முகத்தில் பொற்றிக் கொண்டார்.

 அருணாசலம் வாசிக்க வாசிக்க அவருக்கு கண்ணீர் பெருகியது. சில நிமிடங்கள் பொலபொலவென கண்ணீர் உதிர்த்தவுடன் அவர் மனதி லிருந்து பெரும் பாரம் நீங்குவது போலத் தோன்றியது.  அவர் கச்சேரியை மீண்டும் கவனிக்க ஆரம்பித்தார்.

அன்றைய பிரதான ராகம் கரஹர ப்ரியா. தார ஸ்தாயியில் சஞ்சாரங்கள் ஆரம்பித்ததும் காலக் கடிகாரம் ஸ்தம்பித்துப் போனது. 

பெரிய பெரிய ஸ்வரச் சுழல்களை தன் அமானுஷ்ய மூச்சுக் காற்றின் மூலம் ஒன்றன் பின் ஒன்றாய் ஏவிக் கொண்டிருந்தார் அருணாசலம். 

ஒவ்வொரு சுழலும் ஒவ்வொரு புஷ்பம் போல விரிய, அந்தப் புஷ்பங்களை இணைக்கும் சிறு நூலாய் ஒலித்தது அவர் மூச்சை அவசரமாய் உள்ளுக்குள் இழுக்கும் ஒலி.

 ஆலாபனை நிறைவடைந்த போது பெருமாளின் விஸ்வரூபத்துக்குத் தொடுத்த மாலை அந்த காற்று மண்டலத்தில் மிதந்து கொண்டி ருந்தது.‘சக்கனி ராஜமார்கமு’

 அருணாசலம் கீர்த்தனை வாசிக்க ஆரம்பித்த போது வேம்புவுக்கு மனம் துலக்கிவிட்டது போல ஆகிவிட்டது. ஒவ்வொரு சங்கதிக்கும் ‘ஆமாம்பா! ஆமாம்பா!’ என்று வாயாரச் சொல்லிச் சொல்லி ரசித்தார் வேம்பு.

 கச்சேரி இன்னும் இரண்டு மணி நேரம் தொடர்ந்த பின் வேம்புவை அருகில் அழைத்தார் அருணா சலம்.

 “நாளைக்கு சேலேத்திலே முகூர்த்தம். இப்ப கிளம்பினாத்தான் ரயிலைபிடிக்க முடியும். உத்தரவு கொடுக்கணும்”, என்று கையைக் கூப்பி வேண்டிக் கொண்டார்.

 “ஆஹா! ஆஹா!” என்றபடி அருணா சலத்தின் விரல்களைப் பற்றிக் கொண்டார் வேம்பு.  அவருக்கு அதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் எழவில்லை. 

பிள்ளையாருக்கு தீபாராதனை ஆனதும் மங்களம் வாசித்து கச்சேரியை முடித்தார் அருணா சலம்.  

வாத்தியங்களை சிஷ்யர்கள் கட்டிக் கொண்டிருந்த போது மேடையில் பிரமுகர்களும் ரசிகர்களும் அருணா சலத்தை மொய்த்துக் கொண்டனர்.

 வேம்பு ஐயர் மேடைக்கு கீழே காத்துக் கொண்டிருந்தார்.

ஒருவழியாய் மேடையிலிருந்து இறங்கிய கலைஞர்கள் அவசர அவசரமாக ரயிலடிக்குள் புகுந்தனர்.

 முதல் கிளாஸ் பெட்டி வருமிடத்தில் சந்திர விலாஸி லிருந்து சாப்பாட்டுடன் ஓட்டல் பையனொ ருவன் தயாராக நின்றிருந்தான்.

 அருணாசலம் வருவதற்கு காத்திருந்தது போல் வண்டி நடைமேடைக்கு வந்தது.

ரயிலில் ஏறி ஜன்னல் பக்கம் வந்து உட்கார்ந்து கொண்டார் அருணாசலம்.

 ஜன்னல் கம்பியைப் பிடித்தவாறு நின்றிருந்தார் வேம்பு.

 “ஐயர் வாள்! திருப்தி தானே?”, என்று கேட்டார் அருணாசலம்.

 “இப்பவே எமன் வந்தா சந்தோஷமா செத்துப் போவேன்!”, என்ற படி ஒரு பையை நீட்டினார் வேம்பு.

 துணிப்பைக்குள் பழங்கள், பூ முதலான பிரசாதங்கள் இருப்பது தெரிந்தது. அவற்றுக்கடியில் ஒரு சிறிய கவரில் நூறு ரூபாய் பணத்தை வைத்திருந்தார் வேம்பு.

 வண்டி ஏறியதும் கொடுத்தால் அதை அருணாசலம் பார்த்து மறுக்க வாய்ப்பு ஏற்படாது என்பது அவர் எண்ணம்.

அருணா சலம் அந்தப் பையை வாங்கி இருக்கையில் வைத்துக் கொண்டார்.

 வண்டி கிளம்ப ஆயத்தமானது.

 ”ஐயர்வாள் ! நான் நேற்றைக்கு திருச் செந்தூர் போயிருந்தேன். உங்களுக்குப் பிரசாதம் கொண்டு வந்திருக்கேன்”, என்று சிறு பையை எடுத்து வேம்புவிடம் கொடுத்தார்.

 வேம்பு வாங்கிக் கொண்டதும் வண்டி நகர ஆரம்பித்தது.

 கைகளை அந்தப் பையுடன் சேர்த்துக் கூப்பி அருணாசலத்துக்கு விடை கொடுத்தார்.

 வண்டி கண்ணை விட்டு நீங்கியதும் வீதியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

நடந்தபடி கையிலுள்ள பையைப் பிரித்துப் பார்த்தார்.

 திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதி கண்ணில் பட்டது. அதைப் பிரித்து நெற்றியில் இட்டுக்கொள்ள நினைத்து கையைப் பைக்குள் விட்டார் வேம்பு.

அவர் விரல்கள் சில்லென்று எதையோ ஸ்பரிசித்தன.

அந்தப் பொருளை வெளியில் எடுத்துப் பார்த்தார் வேம்பு.

 சுந்தரியின் தாலிக்கொடி அவர் கண்முன் ஆடியது.

 அப்படி ஒரு பிணைப்பு இருந்த காலம் அது - அய்யருக்கு அருணாசலம் பிள்ளைவாள் தந்த தாலிக்கொடி பரிசு அது !!!

 

Written & Compiled by

M.S. Ramesh - Salem


Monday, 9 September 2024

பாபநாசம்

தென்னகத்தின் நவ கைலாய தலங்கள்
(வலைதள பதிவின் நகல்)

01 : பாபநாசம்
அகத்தியபெருமான் தன் சீடன் ரோமரிஷி முனிவர் கைலாயத்தினை அடையும் பாக்கியம் பெற வேண்டி ஒன்பது தாமரை மலர்களை கொடுத்து, அவை ஒவ்வொன்றும் கரையேறுமிடத்தில் ஒரு லிங்கம் செய்து வழிபட சொன்னார்

அப்படி தாமிரபரணியில் அவர் இட்ட தாமரையில் முதல் தாமரை ஒதுங்கிய இடம் இத்தலம் , அங்கே சிவனை வழிபட்டார் ரோமரிஷி முனிவர்

அதுவரை அங்கு பெரிய ஆலயமில்லை, அகத்தியர் அங்கிருந்து இன்னும் பெரும் தொலைவில் வனத்தில்தான் இருந்தார், இந்த முதல் தாமரை ஒதுங்கிய இடத்தில் லிங்கம் வைத்து வழிபட்டார

நவ கைலாயத்தில் முதல் கயிலாயம் இதுதான்

நவதாமரை என்பது நவகிரகங்களையும் குறிக்கும் விஷயமாகவும் அகத்தியர் அருளினார், அவ்வகையில் இது சூரிய நவகைலாயம் என்றானது

இந்த தலத்துக்கு பாபநாசம் என பெய ர் வர காரணமும் முதன் முதலில் தன் பாவத்தை களைந்து கொண்டவனுமானவன் இந்திரன், தேவராஜன் எனு அந்த இந்திரன்

அவன் ஒரு காலத்தில் தவிர்க்கமுடியா சூழலில்  அசுர குரு சுக்கிராச்சாரியாரின் மகன் துவஷ்டாவை தன் குருவாக ஏற்றிருந்தான் ஆனால் துவஷ்டா மறைமுகமாக அசுரருக்கு உதவிகொண்டிருந்தான், இந்தனால்  இந்திரன் அவனை கொன்றுவிட்டான்

(திருவிளையாடல் புராணத்திலும் இந்த காட்சி உண்டு)

கொல்லபடும்போது துவஷ்டா குரு ஸ்தானம் என்பதால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து கொண்டதும் அவன் பாவம் தீரவும் இழந்ததை பெறவும் இந்த தலத்துக்கு சென்று வழிபட சொன்னார்கள் ரிஷிகள்

அப்படி அவன் இங்கு வந்து நீராடி இந்த சிவனை வணங்கி தன் பாவம் தீர்த்துகொண்டான்  அப்படி அந்த இந்திரன் எல்லா மக்களுக்கும் வழிகாட்டினான், அவன் பாவம் போக்கிய இடம்  "பாபநாசம்" என்றானது, அது எல்லா மக்களுக்கும் பாவம் போக்கும் இடமுமாயிற்று

இதனால்  இத்தலத்துக்கு ‘இந்திரகீழ ஷேத்திரம்’ என்ற பெயரும் கிட்டியது.

அகத்தியருக்கு சிவன் மணகோலம் காட்டியதால் அவர் கல்யாணசுந்தரேஸ்வரர், அன்னை உலக நாயகி என காட்சியளிக்கின்றனர்

அப்படியே அங்கே அகத்தியரும் அவர்மனைவி லோபமுத்திரையும் குடிகொண்டு அருள்தருகின்றார்கள்

ஏழுநிலை கொண்ட ராஜகோபுரம் வாயில் வழி உள்ளே சென்றவுடன் வடக்கு நோக்கியபடி அதிகாரநந்தி சன்னதியினை காணலாம்  அவரை வ‌ணங்கி அனுமதி பெற்று நேரே சென்றால் சுவாமி பாபநாசநாதர் சன்னதி. அங்கே  கருவறையில் சுவாமி பாபநாசநாதர் கிழக்கு நோக்கி காட்சிதருகிறார். அவருக்கு முன் உள்ள மண்டபத்தில் தென் திசை நோக்கிய சன்னதியில் உற்சவ நடராஜர் சிவகாமி அம்மையோடு அமையப்பெற்றுள்ளது.

சுவாமி சன்னதியில் இருந்து சுவாமிக்கு இடப்புறம் உலகம்மை சன்னதி அமையப்பெற்றுள்ளது.

முதல் பிரகாரத்தில் சூரியன், நால்வர், சூரதேவர், அறுபத்து மூன்று நாயன்மார்கள், சப்தமாதர்கள், தட்சிணாமூர்த்தி, கன்னிவிநாயகர், உற்சவ மூர்த்திகள், கல்யாணசுந்தரர், பிட்சாடன மூர்த்தி, லிங்க மூர்த்திகள், சண்டிகேசுவரர், துர்க்கை, சுப்பிரமணியர், சனீஸ்வரர், பைரவர், சந்திரன் ஆகியோர் பரிவார மூர்த்திகளாக பிரகாரத்தின் நான்கு புறங்களிலும் அவரவர்குரிய இடத்தில் காட்சியளிக்கின்றனர்.

இரண்டாம் பிரகாரமான உள்வெளி பிரகாரத்தில் பனையடியான், விசுவநாதர் சன்னதியுடன், சுவாமி கருவறைக்கு நேராக பின்புறம் இக்கோவில் விருட்சமான களா மரம் அமையப்பெற்றுள்ளது. இம்மரத்தின் அடியிலும் லிங்கத்திருமேனியராய் சுவாமி அருள்பாலிக்கிறார்.

வெளி பிரகாரச்சுற்று முடிந்து முன் பக்கம் வருகையில் நவக்கிரக சன்னதியும் அமையப்பெற்றுள்ளது.

கொடிமரத்திற்கு வடதிசையில் அமையப்பெற்றுள்ள தென்திசை நோக்கிய சிறப்பு சன்னதியில் புனுகு சபாபதி காட்சியளிக்கிறார்.

இந்த ஆலயம் காலத்தால் மகா பழமையானது, அவ்வப்போது அது சிதைந்தும் வந்துள்ளது. இந்த பகுதிகள் அடிக்கடி சேரமன்னர்களிடம் பாண்டிய மன்னர்களிடமும் மாறி மாறி வந்தவை என்பதால் இருவருமே திருப்பணி செய்திருக்கின்றார்கள்

அவ்வகையில் இது மாறவர்மன் சுந்தரபாண்டியனால் க்ட்டபட்ட ஆலயம்

இங்கிருக்கும் சிவன் கல்யாணேஸ்வரர் என அழைக்கபடுகின்றார், அகத்தியருக்கு அவர் திருமண கோலம் காட்டினார் என்பது இங்கே ஆத்மா பரமாத்மாவுடன் கூடும் கோலத்தை சொல்வது

மலைலிலிருந்து தாமிரபரணி சமநிலையினை அடையும் அந்த இடமானது  நதி பூமியுடன் கூடுவதை சொல்லும் இடமானது அந்த தத்துவத்தை மவுனமாக சொல்கின்றது

இந்த சிவன் ஒருவன் பாவங்களை முழுக்க மன்னிப்பார், அவன் பாவம் நாசமாகும், பாவம் நாஸ்தியானால் அந்த ஆத்மா துலங்கும், துலங்கிய ஆத்மா கர்மம் முடித்து இறைவனை அடையும் எனது அந்த ஆலயத்தின் தாத்பரியம்

இந்த ஆலயம் பாவங்களை அழிக்கும், பாவங்கள் அழியும் மனிதனுக்கு பிறப்பில்லை அவன் கர்மம் முடித்து கிளம்புவான் அந்த ஆத்மா சிவனை அடையும் என்பது இங்குள்ள தத்துவம்

ஒருவனிடம் இருக்கும் பாவத்தை, தீமையினை, மாசுக்களை அகற்றி அவனை வாழவைக்கும் வரத்தினை இந்த சிவன் அருள்வார்

அதனாலே இது சூரியனுக்குரிய தலமாகவும் அறியபடுகின்றது

சூரியன் இன்றி எப்படி இந்த உலகமில்லையோ , எப்படி உயிர்களும் இயக்கமுமில்லையோ அப்படி உலக உயிர்களின்ன் ஜாதகமுமில்லை

ஆம், சூரியனை மையமாக வைத்தே ஆண்டுகணக்கு முதல் ஜாதகம் வரை உண்டு

சூரியனே தலமையினை தரும் கிரகம், அங்கே எந்த பாகுபாடுமில்லை, அங்கே வெளிபடைதன்மை உண்டு, செல்வாக்கு உண்டு, எதையும் தனக்கென எடுக்காமல் அள்ளி அள்ளி கொடுத்து வாழவைக்கும் குணம் உண்டு

சூரியன் சரியாக இல்லையேல் ஒரு ஜாதகம் சரியாக அமையாது, அவனுக்கு குழப்பமும் சிக்கலுமே வாடிக்கையாகும்

சூரியன் என்பது வெப்ப சக்தி, அந்த சக்திதான் உயிர்களின் அடிப்படை, அந்த வெப்பம் இருக்கும் இடத்தில்தான் உயிர் தங்கும், மானிட உடல் கூட அப்படித்தான் வெப்பத்தோடு உயிரொடு இருக்கும்

அப்படியான சூரியனே அக்னி சக்தி, இந்த அக்னியே சிவவடிவம், அந்த அருள் இங்கே நிரம்பி கிடக்கின்றது

லவுகீகமாகவும் ஜாதகரீதியாகவும் சூரியனின் எல்லா அருளையும் தரும் தலம் இது

சூரியன்   ஒருவன்   ஜாதகத்தில்     நீசம்  பெற்றிருந்தால் நல்லதல்ல‌.

ஒருவரின்   ஜெனன  ஜாதகத்தில்   மேசத்தில்   முதல்  10   பாகைக்குள் சூரியன்  உச்சம்   பெற்று   இருந்து       ,குரு ,செவ்வாய் பார்வை பெற்றிருந்தால் அந்த  ஜாதகம் யோக ஜாதகம்
    
ஆம், சூரியனே ஒளிவடிவம், அந்த ஒளிவடிவமான சூரியனே   ஒருவருக்கு  ஆன்ம   பலம்  அளிப்பவர்   இவர்.   ஆண் தன்மை எனும் தைரியமும் ஆளுமையும் பெண் தன்மை எனும் ஆகர்ஷமும் கொடுப்பது சூரியனின் ஜாதக இருப்பிடமே  

சூரியன் அரசனுக்குரிய கிரஹம்,    ஒரு அரசன் அவன் மட்டும் வலுவானகாக இல்லாம்ல் அமைச்சர் சேனை என எல்லாம் வலுவாக அமைந்தால் சிறப்பான், அப்படி சூரியனோடு சேரும் கிரகங்களை பொறுத்து ஒருவன் ஜாதகம் அமையும்

அதாவது ஜாத்கத்தினை நிர்மானிப்பதே சூரியன் இருக்குமிடம்

சூரியன் ருத்த்ரனை அதிதேவதையாக கொண்டவர், ருத்திரன் என்றால் சிவம், அந்த சிவன் மிகபெரிய அருள் வழங்கும் ஆலயம் இது

இந்துக்கள் அண்டத்தில் இருப்பதையெல்லாம் பிண்டத்திலும் கண்டவர்கள்.  அதனால் ஆத்மாவினை சூரியனின் வடிவமாகக் கண்டார்கள்.

மானுட ஆத்மாவினை சூரியனின் சாயலாக கண்டார்கள், சுருக்கமாகச் சொன்னால் உயிர்சக்தி ஆத்ம சக்தி என சரியாக சொன்னார்கள்.

சூரியனை ஆத்மகாரகன் என அவர்கள் சொன்னதிலே எல்லா ரகசியமும் அடங்கிப் போயிற்று.  அதுவும் அந்த தலம் சூரியனுக்கானது என்பதிலே ஆத்மபலம் தரும் ஆலயம் அது என்பது இன்னும் தெளிவாயிற்று.

ஆக லவுகீகமாக ஒருவனை ஜாதகரீதியாக அருள்பெருக்கும் ஆலயம் இது, ஆன்மீக ரீதியாக ஒருவனுக்கு ஆத்மபலம் கொடுக்கும் ஆலயமும் இது

கையாலம் எனும் சிவநிலையினை அடைய பாவம் நாசமாக்கபட வேண்டும், ஆத்மபலம் அதிகரிக்கபட வேண்டும், அந்த ஆத்மபலத்தை தரும் ஆலயம் இது

இந்த ஆலயம் சிவனின் அருளை பூரணமாக தரும், ஜாதக ரீதியான பலனை சூரியனை முன்னிட்டு தரும், அப்படியே ஆத்மபலத்தை இன்னும் அதிகரிக்கும்

இந்த ஆலயம் சிவனுக்கு மட்டும் சிறப்பன்று, அகத்தியர் அருள் மட்டும் பெரிதன்று, இது பாபத்தை மட்டும்  போக்கும் தலம் அல்ல, இது அன்னையின் சக்தி பீடங்களில் ஒன்று

ஆம், விமலை பீடம் என அன்னையின் இடுப்பு பக்கம் விழுந்த இடம் இது, இடுப்பு என்றால் தாங்குமிடம் என பொருள் அன்னை இங்கு தாங்கும் சக்தியாய் நிற்கின்றாள்

இந்த சக்திபீட அன்னை எத்தனையோ அதிசயங்களை நிகழ்த்திகாட்டினாள், அன்னைக்கு பிடித்தமான மலைதொடர் அது

மேற்கு தொடர்ச்சி மலை என தாமிரபரணி உருவாகும் அந்த இடம் சாதாரணம் அல்ல வெறும் மலைகாடு அல்ல,அங்கு இருப்பதெல்லாம் சூட்சுமம், இன்றும் மனிதர் அறிந்துகொள்ள முடியா சூட்சுமம்

தாமிரபரணியின் மூலமே இன்றுவரை அறியமுடியாதது , அறியமுயன்று சென்றோர் கூட இனம்புரியா சக்தியாலும் அதுவரை உலகில் காணப்படாத ராட்சத வண்டுகளாலும் அலறி அடித்து ஓடினர் என்பதுதான் வரலாறு

சூட்சும தெய்வங்கள் குடியிருக்கும் மலை அது

அங்கேதான் அகத்தியர், அத்திரி மகரிஷி என எல்லோரும் இருந்தார்கள், நம்பி தெய்வம் அங்கே குடிகொண்டது, சென்பகாதேவி அம்மன் வந்தாள், அன்னை பரமககல்யாணி குற்றாலத்தில்தான் குடியிருக்கின்றாள்

அந்த அன்னையின் பெயராலே அந்த ஊர் 'அம்பாள் சமுத்திரம்" என அழைக்கபட்டு இன்று அம்பா சமுத்திரம் என மருவிவிட்டது

அப்படி அன்னை ஆதிக்கம் செலுத்தும் பகுதி அவள் அரசாட்சி செய்யும் பகுதி அது, அவளே தாமிரபரணி அவளே அங்கு தென்றல் , அவளே தமிழ், அவளே அங்கு இயக்கம் அவளே அங்கு மகா சக்தி

கோமதி கல்லில் சிலையாக எழுந்ததால் அவள் கோமதி நாயகி, பார்வதியின் முத்தாரமாக வந்ததால் அவள் முத்தாரம்மன்

அப்படியான அம்மன் அங்கு உலகம்மை நாயகி, விமலை நாயகி என ஆட்சி செய்கின்றாள், சிவன் தன்னை அகத்தியர் மூலம் அடையாளம் காட்டியது போல் அன்னை அவளை 

மிக மிக அழகான பக்திவரலாறு அது, கம்பனுக்கும் காளிதாசனுக்கும் காளமேகனுக்கும் குமரகுருபரருக்கும் அன்னை தன்னை வெளிகாட்டியதுபோல் அந்த பக்தனுக்கும் வெளிகாட்டினாள்

ஆம், பாபநாசத்தை அடுத்த விக்கிரமசிங்கபுரத்தில் நமசிவாயக் கவிராயர் என்பவர் வாழ்ந்து வந்தார்.  அன்னையின் பெரிய பக்தர், அன்னை தவிர ஏதும் அறியாதவர், எந்த அளவு அன்னை மேல் பக்தி என்றால் 
தினமும்  அர்த்தசாம வழிபாட்டில் அம்பிகையை தரிசித்துவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

கவிபொழிவதில் வல்லவரான அவர் எப்போதும் பாடுவார் , கோவிலில் பாடுவார், கூட்டத்தில் பாடுவார், தனியே நடந்து செல்லும் போதும் பாடுவார்

தனியே நடந்து செல்லும் போதும் பாடுவார்

ஒருநாள் இவர் இங்கு தரிசனம் முடித்துவிட்டு அம்மையின் மீது பாடல்களைப் பாடிகொண்டு நடந்தபடியே வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் ஒரு பெண் அவரை தொடர்ந்து புன்னகைத்தபடியே வந்தாள்

அது அர்த்தசாமம் என்பதால் அது ஏதோ பிசாசு அல்லது மோகின் என்பது போல் எண்ணிய கவிராயர், அந்நாளில் வெற்றிலை குழப்பி துப்பினால் பேய் ஓடிவிடும் எனும் நம்பிக்கை படி அந்த அழகான உருவம் மேல் தாம்பூலத்தை துப்பினார், அது அவளின் சேலை மேல் பட்டது, அவள் இன்னும் புன்னகைக்க அவர் விறுவிறுவென நடந்து சென்றுவிட்டார்

மறுநாள் கோவிலை திறந்துபார்த்தால் அன்னையின் ஆடையில் யாரோ தாம்பூலம் துப்பியது இருந்தது, அதிர்ந்த அர்ச்சகர்கள் மன்னனிடம் விஷயத்தை சொனனர்கள்

அக்கால மனன்ர்கள் ஆலயத்தை கண்ணென தெய்வத்தை உயிரென கொண்டவர்கள், இந்த மகா துவேஷத்தை செய்தது யார் என மன்னன் கொதித்தெழுந்தான்

ஊரே அல்லோலப்ட்டது, கடைசியில் எப்போதும் அன்னை எச்சில் தெரிக்க பாடுபவர் என்றும், அன்னை முன் அவர் யாருக்கும் தெரியாமல் பாடி இந்த அவமானம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் சொன்னார்கள்

அவர் விசாரணைக்கு அழைக்கபட்டார், அங்கே தனக்கு இரவில் நடந்ததை சொன்னார் எல்லோரும் நகைத்தார்கள்

ஏதோ தாசி விவகாரம் என்றார்கள்  இன்னும் பல விஷயங்களை சொல்லி அவரை அவமானபடுத்தினார்கள்

அவர் முடிந்தவரை வாதிட்டார் ஆனால் பலனில்லை, அவரின் எதிரிகள் குதுகலித்தனர், கடைசியில் மன்னன் சொன்னான்

"கவிஞரே நீர் ஒரு சம்பவம் சொல்கின்றீர், ஆனால் சபையில் காட்சி இல்லாமல் எதுவும் எடுபடாது என்பதை அறிவீர், இங்கு இனி அன்னைதான் சாட்சி சொல்ல வேண்டும்

அவையோர் சொல்வது நீர் பூஜை முடிந்தபின் அருகிருந்து பாடி இப்படி நடந்துவிட்டது என்பது, நீர் சொல்வது ஏதோ உருவம் என பிதற்றுவது

ஆக நீர் சொல்வதற்கு சாட்சி இனி அன்னைதான்

அதனால் நான் தங்ககம்பி கொண்டு அன்னைசிலையின் கைகளில் பூக்களை கட்டிவைப்பேன், நீர் பாடவேண்டும், நேற்று நடந்ததாக நீர் சொல்வது உண்மை என்றால் அந்த பூக்கள் உம்மை தானாகவே அடையட்டும்" என்றான்

அன்னைமேல் நம்பிக்கை கொண்டு கவிராயரும் சம்மதித்தார், சாக வேண்டிய நிலையில் இருக்கும் அவரின் கடைசி சந்தர்ப்பம் அதுதான்

அப்படியே அந்த பாபநாசம் அம்மன் உலகநாயகி கையில் பூக்கள் தங்க கம்பியால் கட்டபட்டு கவிராயர் பாட வைக்கபட்டார்

கவிராயர் அபிராமி அந்தாதி பாடிய அபிராமி பட்டரை போல, சரஸ்வதி அந்தாதி பாடிய கம்பனை போல  இங்கும் அந்தாதி பாடினார் நமசிவாய கவிராயர்

அவர் பாட பாட அந்த தங்க கம்பிகள் தானாக அவிழ அவிழ சபை அஞ்சி மவுனமானது

அந்த உற்சாகத்தில் கவிரயார் இந்த பாடலை பாடினார்

"விண்டல நின்ற சரற்கால சந்த்ரசு வேதமுக
 மண்டல மும்கை மலரோடுந் தோளின் வழிந்தரத்ன
குண்டல மும்பொலி வாலப் பிரயாக் குமாரத்தியாய்ச்
செண்டலர் செங்கை உலகாள்என் நாவில் சிறந்தனளே"

என்ற பாடலை பாடி முடிக்கவும் அம்மையின் கரங்களில் இருந்த பூச்செண்டு கவிராயர் கைக்கு தானாக வந்தது. 

அந்த நமசிவாய கவிராயர் அப்போது பாடியதுதான் "உலகம்மை அந்தாதி "

சபை அங்கே விழுந்து அவரை வணங்கியது, மன்னன் அவரை பணிந்து அவருக்கு வேண்டியன செய்து அன்னையினை பாட மட்டும் வழி செய்தான்

அவர் அதன் பின்  விக்கிரசிங்கபுரம் அன்னை என அவளை கொண்டாடி சிங்கை சிலேடை வெண்பா, இன்னிசைக் கலிப்பா, உலகம்மை பதிற்றுப்பத்து அந்தாதி, உலகம்மை சந்தவிருத்தம், உலகம்மை பிள்ளைத்தமிழ், பாவவிநாச வண்ணம், உலகம்மை அந்தாதி ஆகியவற்றை எழுதினார்

இது ஒரு பக்தனுக்கு அன்னை தான் அங்கு உண்டு என காட்டிய அடையாளம், அதை தொடர்ந்து ஒவ்வொரு பக்தர்களுகும் தன்னை நாடிவரும் ஒவ்வொரு பக்தனுக்கும் அன்னை அதனை தர தயாராய் இருகின்றாள், தந்து கொண்டும் இருக்கின்றாள்

அந்த ஆலயம் அவ்வலவுக்கு சிவன் அருள், அகத்தியர் அருள், அன்னையின் அருள், சூரியபகவான் அருள்வரை அள்ளி அள்ளி கொட்டும்

அங்கே சித்திரை விசு மிக உற்சாகம், அன்றுதான் சிவனும் பார்வதியும் அகத்தியருக்கு காட்சி கொடுத்த நாள், மேலும் அப்போதுதான் சூரியன் மேஷராசியில் நுழைந்து வருட கணக்கும் தொடங்கும்

அதனால் அந்த நாள் புத்தாண்டு, சூரிய அருளின் தொடக்கம் என விஷேஷம்

சூரியன் முதல் ராசிக்கு வருவதால் அன்று அந்த தாமிரபரணியில் சக்தி அதிகம், சூரியனின் கதிர்கள் வீழ்ந்து அதன் சூட்சும சக்தி அதிகம், அதை பெற்றுகொள்ள நீராடுவதும் அவசியம்

இப்படியான பாபநாசத்தில் சித்திரை வழிபாடு மிக மிக உற்சாகம், அப்படியே சாஸ்தா வழிபாடு அதாவது குல்தெய்வ வழிபாடும் கார்த்திகையில் விஷேஷம்

கார்த்திகை சாஸ்தா வழிபாடு என்பது முருகபெருமான் வழிபாட்டை ஒட்டியது, அங்கே சித்தர்களின் மூலவரும் தெய்வத்தின் மூலவரும், சக்தியின் மூலமும் இருப்பதால் அங்கு அந்த வழிபாடு விஷேஷம்

நவ கையால தலத்தில் முதல் தலம் இது

இது சிவனின் தனிபெரும் தலம், சூரியன் சம்பந்தமான எல்லா தோஷங்களும் பலவீனமும் மறைந்து ஜாதகம் உச்சம் பெறும் தலம், இதுதான் அன்னையின் தனி அருளை பெற்றும் தரும் தலம்

அங்கே அந்த தாமிரபரணி, வேத தீர்த்தம், பைரவ தீர்த்தம் ஆகியவற்றில் நீராடும் போது கர்மவினைகள் பாவங்கள் கழிகின்றன‌

பாபநாசம் அங்கே நடந்தபின் ஆத்மா சிவன் அருளில் சுத்தமாகின்றது, சூரியனின் அம்சத்தால் ஆன்ம பலம் அதிகரிக்கின்றது

அன்னையின் அருளால் எல்லா நலமும் கைகூடுகின்றது

இந்த ஆலய லிங்கத்துக்கு "முக்கிளா லிங்கம்" என்றொரு பெயர் உண்டு, அதாவது இங்கு தல விருட்சம் களா மரம், மூன்று களா இருப்பதால் முக்களா

இந்த மூன்று களாவும் ரிக் யஜூர், சாம வேதங்களை சொல்பவை, அத்ர்வண வேதம் இங்கு இல்லாதது கவனிக்கதக்கது

அதாவது அதர்வணத்தின் இன்னொரு பக்கமான ஏவல் பில்லிசூனியமெல்லாம் இங்கு மாறும், ஆம் அம்மாதிரியான சிக்கல்கள் இங்கு தீரும்

இந்த ஆலயத்தில் எல்லா வரமும் கிடைக்கும், அதற்கு சில நேச்சைகளும் உண்டு

இந்த அம்மன் முன் உரல் உண்டு, அந்த உரலில் மஞ்சளிட்டு இடித்து அன்னைக்கு சாற்றி பின் சிறிது உடலில் பூசி உட்கொண்டால் குழந்தை இல்லா பிரச்சினைகள், திருமண தடைகள், குடும்ப சண்டைகள் தீரும்.

இங்கிருக்கும் சபாபதிக்கு புனுகு சாற்றி வழிபட்டால் நினைந்த காரியம் கைகூடும்

அங்கே செல்லும் போது தீர்த்தத்தில் நீராடி சிவனை வணங்குங்கள், சபாபதிக்கு புனுகு சாற்றி வணங்குங்கள், அன்னைக்கு மஞ்சள் இடித்து பெண்கள் வழிபட்டால் சிறப்பு

அந்த இடத்தில் ந்மச்சியாவ கவிராயர் பாடிய பாடல்களை படித்து வணங்கினால் இன்னும் சிறப்பு

இங்கிருந்து இரு கல் தொலைவில் அகத்தியருக்கும் அவர் மனைவி லோபம்த்திரைக்கும் ஆலயம் உண்டு, அதை வணங்குதல் சிறப்பு

அந்த லோபமுத்திரை முன்னால் "லலிதா சகஸ்ரநாமம்" பாடுதல் கூடுதல் பலன் தரும், காரணம் அவள்தான் லலிதா சகஸ்ர நாமம் எனும் நூலையே கொடுத்தாள், அன்னை அவள் வழியாகத்தான் கொடுத்தாள்

இத்தனை சிறப்புமிக்கது நவ கைலாய தலங்களில் முதல் ஆலயம், அது அகத்திய முனி காலம் தொடங்கி இந்திரன் முதல் எத்தனையோ தேவர்கள் ரிஷிகள் மாபெரும் மன்னர்கள் கவிஞர்கள் என எல்லோருக்கும் பெரும் வரம் அருளிய ஆலயம்

அந்த வரத்தை சிவன் கொடுப்பார், உங்கள் ஆத்மபலமும் சக்தியும் கூடும், மாசு அனறன் ஆத்மாவோடு வாழ்வின் சிக்கலெல்லாம் தீர்ந்து லவுகீகம் சிறக்கும்

ஆன்மீமாக கயிலாய நிலை எனும் சிவநிலை அடைய, சிவனோடு கலக்க முதல் சக்தியான ஆத்மபலத்தை பெறுவீர்கள் இது சத்தியம்

இது என்னுடையபதிவு அல்ல
முகநூல் பதிவின் நகலாகும்

திருநவேலி தமிழு

முழுசா படிச்சு பாருங்க நம்ம திருநவேலி மக்களோட சிறப்பு தமிழ்

அவன் சரியான " நப்பி" பயல்லா...

உன் "பைதா" சரியா ஓடல. நல்லா பாருடே...

"சம்படத்துல" இட்லி வச்சிருக்கேன்.

"கறுக்குற" நேரத்துல எங்க போற. 

ஏ.. "சாரத்தை (சாரம்)" ஒழுங்கா கட்டம்டே...

ஏல "பைய" வாயேன். ப்ளைட்டையா பிடிக்க போற..

ஏ "கொண்டி"யை ஒழுங்கா போட்டிருக்கியா.

அவன் சரியான "கோட்டி"ல்லா...

"அந்தால" அவனை "வளவு"குள்ள வச்சு நாலு "சாத்து" சாத்தனும்ல..

நம்ம "சேக்காளி" மெட்ராஸ்ல எப்படின்னே இருக்கான்.

ஏட்டி "மச்சி"ல காயப்போட்டுருக்கிற துணியை எடுத்துட்டு வந்துரு. 

"கொடைக்கு" மாமன் வருவாவளா?

ஏலா... இந்த "தொரவா"வை எங்க வச்ச? அந்த "மாடத்துல" இருக்கும் . பாருங்க.

ஏ "ஆக்கங்கெட்ட கூவை"... ஒனக்கு ஒருதடவை சொன்னா மண்டையில ஏறாதா?

இன்னைக்கு ஒரு "துஷ்டி" வீட்டுக்கு போயிருந்தேன்.

அங்கன போய் என்ன பண்ணப் போறிய. இங்கன "செத்தநேரம்" ஒட்காந்துட்டுதான் போங்களேன்.

இந்தா இப்பதான் செத்த "குறுக்க சாச்சு" படுத்தேன். அதுக்குள்ளே யாரோ கதவை தட்டுறா... போய் பாரு யாருன்னு.

"செத்த மூதி" என்ன பேச்சு பேசுதான். அந்த "வாரியலை" எடுத்து நாலுசாத்து சாத்து. அப்பத்தான் அடங்கும்.

அவன் "இடும்பு"க்குன்னே பண்றாம்பா. சரியான இடும்பு பிடிச்ச பய.

ஏம்ல "ஆச்சி" "சீக்கு"ல விழுந்து செத்து கெடந்த பிறவுதான் பாக்க வரலாம்னு இருக்கியோ.

அண்ணாச்சி பாத்தியளா, இந்த மெட்ராஸ்காரன்"சீனியை" போய் சர்க்கரை ன்னு சொல்றான்.

நமக்குஅங்கன செட்டிகுளம் பக்கத்துல "ஒருமரக்கா வெர(த)ப்பாடு" கெடக்கு.

"அப்பயே " அல்லது "அந்தானிக்கு" அங்க வர வேண்டியதுதானே.

"திண்(ட்)டு" மேல நின்னு பாருல. 

இவனோட ரொம்ப "நொம்பலமா" அல்லது" ரோதனையா" போச்சடா. 

அவ்வோவீடு பெரிய "கொட்டாரம்" கணக்கல்லா இருக்கும்.

பொட்டபிள்ளைக்கு என்ன சத்தமா"சிரிப்பாணி" வேண்டிக்கெடக்குங்கேன்

தப்பு பண்ணுனா "மாப்பு" ன்னு ஒரு வார்த்தை சொல்றதுல ஒனக்கு என்னடே சங்கடம். 

அவளுக்கு "தூரம்" .அதான் "பொறத்தால" உட்காந்திருக்கா. 

ஒனக்கு அவனுககூட என்னல " சோலி" வேண்டிக்கெடக்கு. அவனுககூட சேராதன்னு எத்தனைதடவை சொல்லிஇருக்கேன்.

ரொம்ப பேசுன மவன "சங்க அறுத்துருவேன்"

அவன் சரியான "மண்டைக்"கணம் பிடிச்ச பயலாச்சே அண்ணாச்சி.

எதித்துப் பேசுனாம்னா அந்தால "செவுட்டுல" ரெண்டு இளக்கு இளக்கலாம்னு தோணுச்சு.

நேத்திக்கு முருகன் வயல்ல நெல் அறுப்பு. நெல்லே கம்மின்னே. அவ்வளவும் "சாவி"

அந்த மரத்து "மூ(ட்)டு"ல, ஒண்ணுக்கு இருக்கப் போனா அங்க மூடு கணக்கவே சரியான சாரைப்பாம்பு ஒண்ணு பார்த்தேண்ணே...

அக்னி "வெக்க" ஆளை சாச்சுப்புடும்னு சும்மாவா சொன்னாக. என்னா "வேக்காடு".

அவன்சரியான "சூனியக்காரப்"பயலால்லா இருக்கான். 

இதையெல்லாம் தாண்டி, அவன் சரியான "மஞ்சமாக்கான்". "மேப்டியான்" என்ன சொல்லுதான். சுத்த "லேக்காவால்லா" இருக்கான். "அண்ணாச்சி" "ஆச்சி" "அத்தான்" "கொழுந்தியா", "மதினி", "சகலப்பாடி" போன்ற உறவுமுறைகளை அழைக்கும் விதங்களும் வித்தியாசமானவை.

 "சவத்தெளவு" ஒரு மண்ணும் வெளங்கல...

 திருநவேலிகென்றே இன்னும் பல சிறப்பு சொற்கள் உள்ளன. பெருசா சொல்ல வந்துட்டான், பெரிய "மேதாவின்னு" நெனப்பு போலன்னு சொல்றது புரியுது. :)

ஓடத்தில் பிடித்தவை - பாகம் 1

ஓடம்...

வலைதள (Internet) ஆற்றில் நான் பயணித்துக் கொண்டிருந்த போது என்னை படிக்கச் செய்த சில பதிவுகள் ... இது பதிவு என்னுடையதல்ல... 

சீனாவின் பட்டும், இந்திய மிளகும் பட்டுசாலை எனும் சாலை வழியாக துருக்கி மூலம் ஐரோப்பாவினை அடைந்துகொண்டிருந்தன, அது ஒன்றே பிரதான இணைப்பு.

அலெக்ஸாண்டர் காலம் முதல் போப்பாண்டவர்கள் உச்ச காலம் வரை அது ஐரோப்பியர் கட்டுபாட்டிலே இருந்தது, வியாபாரம் அதன் மூலமே நடந்தது.

இது யார் கட்டுபாட்டில் இருப்பது என்று தொடங்கிய அரசியல் போர், பின் மதச்சாயம் பூசப்பட்டு சிலுவைப்போர் என தொடர்ந்தது, வலுவான துருக்கியர் அனாசாயமாக விரட்டினர், இந்நிலையில்தான் எப்படியோ ஆசியா சுற்றி வந்து , இந்தியாவினை பார்த்து வாயினை பிளந்தான் அவன்

இன்று நாம் ஐரோப்பாவினை ஆஆஆ என பார்கின்றோம் அல்லவா? அப்படி.

உலகின் வரலாற்றை மாற்றி போட காரணமாயிருந்தவன் மார்க்கோ போலோ, இத்தாலிக்கார வியாபார் செட்டி

வியாபாரிதான் ஆனால் இந்தியா, சீனம் என ஆசியாவினை சுற்றிவிட்டு ,செல்வம் இந்தியாவில் குவிந்து கிடக்கிறது என்ற ஐரோப்பியரின் கனவிற்கு, ஆமாம் நானே கண்ணால் பார்த்த சாட்சி என்று சூடமேற்றி சத்தியம் செய்தவர்.

அதுமுதல் “இந்தியா கிறுக்கு” பிடித்து அலைந்தது ஐரோப்பா, தேடினார்கள், முதல்வெற்றி போர்ச்சுகல்லுக்கு உபயம் வாஸ்கோடகாமா, அவன் கோழிக்கோட்டில் மதமாற்றம் தனக்கென ஒரு நாடு என முயன்றபோது இந்துக்கள் அவனை அடித்து கொன்றார்கள்

பின் கிருஷ்ணதேவராயரிடம் சென்று கோவா பக்கம் அவர்கள் பதுங்கினார்கள், வெடிபொருளுக்காக இன்னும் சில விஷயக்களுக்காக நாயக்கரும் அவர்களை அனுமதித்தார்

வாஸ்கோடகாமா வழியில் பலர் வந்தார்கள் , அவர்கள் வரும்பொழுது, முக்கால சோழ நாட்டின் பகுதியான அந்த கடற்கரை நாயக்கர்களுக்கு கட்டுபட்டதாயிருந்தது, ஆனாலும் ஆண்டு கொண்டிருந்தது கோலொண்டா சுல்தான்

அந்த கோல்கொண்டா சுல்தானுக்கு நாயக்கர்கள் கட்டுபட்டவர்களாய் இருந்தார்கள்

இங்கே 15ம் நூற்றாண்டில் வந்தவர்கள் போர்ச்சுகீசியர்கள், அவர்கள் செல்லுமிடமெல்லாம் செய்யும் மதமாற்றத்தை இங்கும் செய்து, மயிலாப்பூர் கோவிலை அழித்து அங்கே "செயின்ட் தாமஸ்" என பொருள்படும் சாந்தோம் பகுதியினை அமைத்தார்கள்

இயேசுவின் சீடனான தாமஸ் அங்கு வரவே இல்லை, இலங்கையில் கண்ணகி கோவிலை மாதா கோவில் என மாற்றிய கோஷ்டி, வேல்விழி அம்மனை வேளாங்கண்ணி அம்மன் என மாற்றிய கோஷ்டி, இங்கும் சிவன் கோவிலை சாந்தோம் என மாற்றிற்று

அங்கே ஒரு கோட்டையினை கட்டினார்கள், 15ம் நூற்றாண்டில் அதை கட்டினார்கள் அதன் பெயர் சாந்தோம் கோட்டை

அன்று மெட்ராஸ் எனும் பெயர் இல்லை, சென்ன கேசவ பெருமாள் கோவில் என அறியபட்ட ஊராய் இருந்தது, சென்ன கேசவ என்பதுதான் சென்னை என மருவிற்று

இக்கால கட்டத்தில்தான் , மெட்ரூஸ் எனும் போர்ச்சுகீசிய கவர்னர் இறந்து அவன் பெயரால் அவ்விடம் மெட்ருஸ் என்றாகி பின் மெட்ராஸ் என்றானது

15ம் நூற்றாண்டின் முடிவில் கோல்கொண்டா சுல்தானுக்கும் போர்ச்சுகீசியருக்கும் மோதல் நடந்து அங்கே தலை வெட்டபட்ட நிலையிலும் போராடிய சுல்தான் தளபதி வரலாறெல்லாம் நடந்தது

பிரிட்டிசார் இங்கு 16ம் நூற்றாண்டில்தான் வந்தார்கள், பின் இந்த கடற்கரை பக்கம் வந்தார்கள்

"சோழ மண்டல" கடற்கரையினை அப்போதே போர்ச்சுகீசியர் "கோர மண்டலம்" என மாற்றியிருந்தார்கள், அவர்களின் கோர முகம் அப்படி

பின்னாளில் பிரிட்டனும்,பிரான்சும் போர்ச்சுக்கல்லை பிடரியில் பிடித்து தள்ளி விரட்ட போர்ச்சிகீசியர் வெளியேறினர். ஆனால் அந்த “மெட்ராஸ்” என்ற பெயர் மாறவில்லை, பிரிட்டிசாரும் அப்படியே அழைத்தனர், தமிழில் அது “மதராசபட்டினம்” ஆயிற்று.

அந்த இடத்திற்கு கொஞ்சம் தள்ளி, பிரிட்டானியர் கோட்டை கட்டினர், அந்நாளைய பிரிட்னுக்கு புனித ஜார்ஜ, தெற்கத்தியருக்கு பெரும்பாலும் முனியாண்டி, மதுரை வீரன், இசக்கியம்மன், சுடலையாண்டவர் போல அவர்களுக்கு இங்கிலாந்தின் காவல் தெய்வம் ,புனித ஜார்ஜ் பெயரினை இட்டார்கள். மறக்காமல் ஒரு மாதா கோயிலும் கட்டிகொண்டார்கள்.

கோட்டைக்கு நிலம் வாங்கிய நாள் இன்று ஆகஸ்ட் 22ல் கொண்டாடும் சென்னை தினமாம், கோட்டை திறக்கபட்டநாளில்தான் சென்னை தினம் கொண்டாடி இருக்கவேண்டும், ஆனால் யாரோ புண்ணியவான் பத்திரம்முடிந்த நாளையே குறித்துவிட்டான்

பிரிட்டிசாரின் அக்கோட்டைதான் கிட்டதட்ட 350 வருடமாக ன்னிந்தியாவின் கட்டுப்பாட்டு அறையாக திகழ்ந்ததும் அந்த கோட்டை, மாநிலங்கள் பிரிக்கபட்டபின் இன்றுவரை தமிழக தலைவிதி எழுதபடுவது எல்லாம் அந்த கோட்டைதான்

 பலவகை விவாதங்ள், தலைவரின் சிறப்புரைகள்,சட்டங்கள், தீர்மானங்கள் என‌ இன்னும் பல சிறப்புகளுக்கு அடையாளம் அந்த கோட்டை.

இத்தாலியின் வெனிஸ் போலவே திட்டமிட்ட நீர்வழிச்சாலையினையும் பிரிட்டிசார் அமைத்திருக்கின்றார்கள், அந்த சென்னை அப்படித்தான் இருந்திருக்கின்றது, பின்னாளில் எல்லாம் நாசமாய் போய்விட்டது.

இந்த இடம் கோட்டைக்காக வாங்கும் பொழுதும், அதில் பெரும் லண்டன் கனவான்கள் ஆளும்பொழுதும், நிச்சயம் திருக்குவளை வாரிசும் வந்து ஆளும்ம் நினைத்திருப்பார்களா?

பன்னீரும் பழனிச்சாமியும் அமர்வார் அதை சசிகலா என ஒருஅம்மையார் கண்டு அழுவார் என யார் நினைத்திருபபர்?

விதி போட்ட சாலை அப்படி

அக்கோட்டையில்தான் இந்தியாவில் பிரிட்டிசார் ஆட்சியினை தொடக்கி வைத்த ராபர்ட் கிளைவ் வசித்தான், அதன் மாடத்திலிருந்து அவன் தேநீர் பருகுவானாம், அவனின் திருமணம் கூட சென்னை கோட்டையில்தான் நடந்தது,

அப்பொழுது சென்னை பகுதி நதிகள் எல்லாம் ஓடங்கள் ஓடுமாம், அதில் அவனுக்கு பிடித்தமான நதியில் அவன் படகோட்டுவானாம்

அதில் ஒன்று கூவம், இன்று நாறி கிடக்கும் கூவம், விடுங்கள். அக்காலம் அவ்வளவு அழகாய் இருந்திருக்கின்றது.

நிச்சயமாக சென்னைக்கு திருப்புமுனை கொடுத்ததே அந்த கோட்டைதான், அது அமையாவிட்டால் சென்னை இந்த அளவிற்கு வளர்ந்திருக்காது, , அசுரவேகத்தில் கிட்டதட்ட 60 கிராமங்களை விழுங்கி இன்று பிரமாண்டமாய் எழுந்து நிற்கிறது, இன்று கிட்டதட்ட 80லட்சம் மக்கள் வாழும் நகரம், ஆசியாவின் குறிப்பிடதக்க நகரங்களில் ஒன்று

பகை நாடுகளின் பெரும் இலக்குகளில் சென்னையும் ஒன்று, சில நாடுகளின் ஏவுகனைகளின் நுனி சென்னை நோக்கியே திருப்பபட்டு நிற்கிறது.

சென்னையும், அதற்கு காரணமான ஜார்ஜ் கோட்டையும் பல ஆபத்துக்களை கடந்துள்ளன், பாண்டிச்சேரி பிரென்ஞ் கவர்னர் டூப்ளேவிற்கு அதன் மீது ஒரு கண், பதிலுக்கு பிரிட்டிசார் அவர் முதுகை உடைத்துவிட்டார்கள்

ராபர்ட் கிளைவ் எத்தனையோ போர்களுக்கு அங்கிருந்துதான் திட்டமிட்டான், உத்தரவு கொடுத்தான்.

மருதநாயகம் பிரெஞ்ச் படைகளை விரட்டி அதனை மீட்டு தான் தன் வீரத்தினை நிரூபித்துகாட்டினான்.

முதலாம் உலகப்போரின் போது உலகை மிரட்டிய ஜெர்மனியின் நீர்மூழ்கி எம்டன் சென்னை கோட்டையை குறிவைத்து தாக்கியது,(அந்த கல்வெட்டு இன்றும் உண்டு), முதலும் கடைசியுமாக சென்னை மீது நடந்த ராணுவ தாக்குதல் அது, அதன் பின்னர் ஆபத்தில்லை

ஆனால் ஆபத்து மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் பொழுது எழுந்தது, சென்னை எங்களுக்கு சென்னை வேண்டும் அல்லது சண்டிகர் போல பொதுநகராக இருக்கலாம் என போராடினர் தெலுங்கர்கள், கிட்டதட்ட அவர்களுக்கு சாதகமான சூழல், அன்றேல்லாம் ஐதராபாத் சிறு நகரம், விசாகபட்டினம் தூத்துக்குடி அளவிற்கே இருந்தது, விடமாட்டோம் என பிரளயம் செய்தனர் தெலுங்கர்கள்.

“எங்க இருந்தா என்ன இந்தியாவில தான இருக்குண்ணேன்??” என காமராஜர் சிந்திக்க, “வெங்காயம் அப்படியும் அது திராவிடநாட்டிலதான இருக்கு” என்று பெரியாரும் ஒதுங்கிகொண்டனர்,அண்ணாவோ பணம் படைத்த பெரியாரை எதிர்த்து என்ன செய்ய என சிந்தித்த காலம், கருணாநிதி அன்று கலைஞர் அல்ல, ஆனால் அறியபட்ட வசனகர்த்தா, அவர் என்ன ஆகபோகின்றார் என்பது அவருக்கே தெரியாத காலம், போராட யாருமில்லை,

ஒரே ஒருவரை தவிர அவர் ம.பொ.சிவஞானம், தமிழரசு கட்சி நிறுவணர்.

அங்கிள் சைமன் தான் முதலில் தமிழர் கட்சி கண்டவர் ,ஆதித்தனார்தான் வழிகாட்டி என யாராவது சொன்னால் அவர்களை அப்படியே ராஜபக்ஸேவிடம் ஒப்படைப்பது அவருக்கு நலம், அரசியலையாவது கற்பிப்பார்.

பலர் தமிழியக்கம் நடத்தினர் அவரில் சிலப்பதிகாரத்தை கரைத்து தெளித்த “சிலம்பு செல்வர்” என அறியபட்ட ம.பொ.சி பிரசித்தம், அவரை விட அவர் மீசை பிரசித்தம், அண்ணாவின் மயக்கும் தேன் தமிழில் சற்று மங்கிபோனவர் ம.பொ.சி.

ஆனால் தமிழரின் எல்லையை காத்த போராட்டம் இவரால் மட்டும்தான் நடைபெற்றது, அவரின் எழுச்சியான போராட்டத்தில் சென்னை தமிழகத்திற்கு வந்தது, திருத்தணியும் வாங்கிகாட்டினார், திருப்பதி முதல் திருஅனந்தபுரம் வரை தமிழரின் எல்லை என முழக்கமிட்டார்.

திரு என்பது தமிழ்பெயர், திருப்பதி தமிழனுக்கே சொந்தமான அடையாளம், என ஆதாரத்தோடு அவர் முழங்கிய முழக்கம் கொஞ்சமல்ல‌

திருப்பதியும் உங்களுக்கா என தெலுங்கள் பொங்கி தற்கொலை முயற்சி வரை சென்றனர், “தேவுடா” தமிழகம் வர மறுத்தார் அங்கே தங்கிவிட்டார், கொஞ்சம் தமிழகம் போராடியிருந்தால் திருப்பதி கிடைத்திருக்கும்,இந்து அறநிலையதுறை அமைச்சருக்கு போரே நடந்திருக்கும்.( பல ஊழலும் நடந்திருக்கும் ), கிடைக்கவில்லை அதுவும் நல்லது.

தந்திரமாக கேரளம் முந்திகொண்டு திருவனந்தபுரம் எங்கள் தலைநகர் என்றது, நிச்சயமாக அன்று அது அவர்கள் தலைநகராக இருக்க சம்பந்தமில்லாதது, அரசியலில் முந்திகொண்டார்கள், அதுவும் பரவயில்லை, இல்லை என்றால் பதமநாபசாமி கோயில் என்ன ஆகியிருக்குமோ, சுரங்கம் அமைத்து தூக்கியிருப்பார்கள், மணலையே விடாத தமிழகம் இது.

சினிமா ஸ்டூடியோக்கள் கூட சென்னையை நம்பாமல் சேலத்தில்தான் அக்காலத்தில் கட்டபட்டன, முதன் முதலில் துறைமுகமாக மட்டும் அறியபட்ட சென்னை கொஞ்சம் கொஞ்சமாக எல்லா தொழிலின் சந்தையாக‌ மாறிற்று, இன்று சென்னையின் நிலை வேறு, தமிழகத்தின் எல்லா கிராமங்களிலிருந்தும் அதனோடு நேரடியாகவோ இல்லை மறைமுகமாகவோ தொடர்பில்லாதவர் யாருமில்லை.

மக்கள் தொகை பெருக,பெருக சில பிரச்சினைகளும் பெருகும், அதனில் சென்னை சிக்கி இருக்கலாம், ஆனால் சில சிறப்புக்கள் சென்னைக்கு எப்போதும் உண்டு.

சாதிய கலவரமோ, இல்லை மத,இன‌ ரீதியான வன்முறைகளிலோ சிக்காத இந்திய நகரங்களில் சென்னையும் ஒன்று, கல்கத்தா,மும்பை என பெருந்தீ எழும்பி தாண்டவமாடிய நகரங்கள் உண்டு, சென்னை அப்படியல்ல, அதன் மக்களும் அப்படியல்ல,

இதுதான் சென்னை இக்காலம் வரை பதித்திருக்கும் முத்திரை.

மயிலாப்பூர் கோயில், கபாலீஸ்வரர் ஆலயம்,,விக்டோரியா ஹாலும் அதிலுள்ள ரவிவர்மனின் ஓவியங்கள், எழும்பூர் மியூசியம், பல தலைவர்கள் வாழ்ந்த இல்லம், விவேகானந்தர் தங்கிய இல்லம், ரோஜா முத்தையா நூலகம், யில் நிலையங்கள், காமராஜரை தவிர எல்லா முதல்வர்களையும் தமிழகத்திற்கு தந்த ஏ,வி.எம் ஸ்டூடியோ, போயஸ் கார்டன் நாடக பள்ளி என இன்னமும் ஏராள பெருமை கொண்டிருந்தாலும்

முதல் அடையாளம் அந்த கோட்டையே. அந்த கோட்டை இன்று ராணுவத்திற்கு சொந்தமானது

இது நல்ல துறைமுகம் என கண்ட போர்த்துகீசியரும், கோட்டை அமைத்து சென்னைக்கு அடிகோலிய பிரிட்டிசாரும், அதனை குறிப்பிட்ட இடமாக மாற்றிய ராபர்ட்கிளைவும் (கிளைவின் திருமணம் சென்னை கோட்டையில்தான் நடந்தது), அதனை மாதிரி நகரமாக திட்டமிட்டு கொடுத்த லார்டு ரிப்பனும், பின்னாளில் அதனை தமிழரின் தலைநகராக மாற்றி தந்த ம.பொ.சியும் ஏனோ மனதில் வந்து வந்து போகின்றார்கள்.

அந்த பிரிட்டிசாரின் கோட்டையில் அடிமை வியாபாரம் நடந்தபோது புனேயில் இருந்து ஓடிவந்து மீட்டு இனி அடிமை வியாபாரம் இங்கே நடக்க கூடாது என தடுத்த் வீரசிவாஜியும் நினைவுக்கு கட்டாயம் வருவான்

அடிமைமுறை ஒழிப்பினை உலகில் முதலில் கண்டது அக்கோட்டைதான், வீரசிவாஜி அதை செய்தான்

(உண்மையில் முதலில் சென்னையினை காத்தவன் ராபர்ட் கிளைவ், அவன் இல்லாவிட்டால் சென்னை பிரெஞ்ச்காரன் வசம் ஆகியிருக்கும்

பாண்டிச்சேரி, கோவா போல ஒரு மாதிரி ஊராக அது மாறியிருக்கும், கிளைவ் அதனை காத்தான்)

இவர்கள் இல்லாவிட்டால் தமிழகத்தில் சென்னையோ, இல்லை சென்னையில் தமிழர்களோ ஏது??

இன்று சென்னை நாள்

மாற்றம் ஒன்றே மாறாதது, காடாக கிடந்த இடம் கிராமங்களாக மாற ஒரு காலம் வந்தது, பின் அது நகரமாக மாற இன்னொரு காலம் வந்தது

இனி அந்த நகரத்தை அப்படியே வைத்துவிட்டு அருகில் மிகபெரிய துணைநகரம் அமைப்பதே சரியானது

காலம் அதையும் செய்யும், பிரிட்டிஷ் ஆட்சியில் உருவாக்கபட்டு வளர்ந்த நகரம் அது, பிரிட்டிசார் வெளியேறும் போது உலகின் முன்னனி நகராய் இருந்தது

பின் அடுத்த ஆட்சியில் என்னாயிற்று என்பது ரகசியமல்ல‌

கல்கத்தாவினை .........டுகள் நாசமாக்கினார்கள், சென்னையினை .... விடம் பின்னடைய வைத்தது

குட்டி ஊரான பெங்களூர் தேசியத்தில் வளர்ந்தது, பம்பாய் தேசியத்தில் இருந்ததால் உலகின் முக்கிய நகரமாயிற்று

சென்னை சிங்கப்பூர், ஹாங்காங் போல வளர்ந்திருக்கவேண்டிய நகரம் , அதன் அடிப்படை கட்டுமானம் அழகானது உறுதியானது

ஆனால் அதன்மேல் ....விடம் கட்டி எழுப்பிய கோபுரம் சரியாக அமையவில்லை சென்னை குழம்பி பொனது

அதன் துணைநகரமாவது நல்லபடியாக எழுந்து வரட்டும், அது உருவான பின் நோய்பட்ட சென்னை தன்னை சீரமைத்து கொள்ளட்டும்

இது பிரம்ம ரிஷி (Facebook post) பதிவு

ஓடம் இன்னும் பயணிக்கும் ... 

Tuesday, 25 November 2014

போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா?


நண்பர்களோ அல்லது மற்றவர்களோ அவர்களைத் தொடர்புகொள்ள நம்மிடம் தமது மின்னஞ்சல் முகவரியைப் பகிர்ந்துகொள்கின்றனர். ஆனால் மற்றவர்கள் பகிர்ந்துகொள்ளும் மின்னஞ்சல் முகவரிகள் சரியானதா இல்லை போலியானதா என்று பார்த்தவ நம்மால் கண்டறிய முடியாது.

அவர்கள் கொடுக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினாலும் சென்று சேராது. இதற்கு காரணம் ஒருவேளை அவர்கள் தவறான மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்திருக்கலாம் அல்லது அதிக நாட்கள் உபயோகிக்காமல் விட்டதால் செயலிழந்து இருக்கலாம். இல்லையென்றால் வேண்டுமென்றே நம்மிடம் போலியான மின்னஞ்சல் முகவரியை கொடுத்திருக்கலாம்.

அதுபோன்ற நேரங்களில் குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரி சரியாக வேலை செய்கிறதா இல்லை செயலிழந்து விட்டத கண்டறிய நமக்கு ஓர் இணையதளம் உதவி புரிகிறது.

அந்த இணையதளத்துக்கானலிங்க்.

http://www.verifyemailaddress.org/

ஒரு மின்னஞ்சல் சரியானதா இல்லை போலியானதா என்று அறிந்த நீங்கள் அதிக தொழில்நுட்ப அறிவு பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பிட்ட லிங்கில் சொடுக்கி அந்தத் தளத்துக்குச் செல்லுங்கள்.

அதில் ஒரு விண்டோ வரும். அதில் உள்ள காலி கட்டத்தில், நீங்கள் பரிசோதிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து அருகில் உள்ள Verify Email என்ற பட்டனை அழுத்தவும். நீங்கள் அவ்வாறு அழுத்தியவுடன் நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரி சரியானதா, இல்லை போலியானதா என்ற முடிவு வரும். குறிப்பிட்ட மின்னஞ்சல் சரியாக இருந்தால் அது Valid என்றும், இல்லை என்றால் not Valid என்றும் வரும்.அதை வைத்து குறிப்பிட்ட மின்னஞ்சல் சரியானதா இல்லை போலியானதா என்பதை நீங்க தெரிந்து கொள்ள முடியும்.

நன்றி - Nanayam Vikatan

நமஸ்காரங்கள் எத்தனை வகை, விதம்

நமஸ்காரங்கள் எத்தனை வகை, விதம் 
நாம் செய்யும் நமஸ்காரங்கள் ஐந்து விதமாக பார்க்கலாம். அவை, ஓரங்க நமஸ்காரம், மூன்று அங்க நமஸ்காரம், (பஞ்ச அங்க) பஞ்சாங்க நமஸ்காரம், சாஷ்டாங்க நமஸ்காரம் மற்றும் அஷ்டாங்க நமஸ்காரம் ஆகும்.

ஓரங்க நமஸ்காரம் 
வழிபடுபவர், தனது தலையை மட்டும் குனிந்து வழிபாடு செய்தல் ஓரங்க நமஸ்காரம் எனப்படுகிறது.

மூன்று அங்க நமஸ்காரம்மூன்றங்க நமஸ்காரம் 
வழிபடுபவர், தலைமேல் தனது இரு கைகளையும் கூப்பி வழிபடுவது மூன்றங்க நமஸ்காரம் எனப்படுகிறது.

பஞ்ச அங்க நமஸ்காரம் 
வழிபடுபவர், தனது தலை, கைகள் மற்றும் முழந்தாள் ஆகிய அங்கங்கள் மட்டும் தரையில் படுமாறு வழிபாடு செய்வது பஞ்ச அங்க (பஞ்சாங்க) நமஸ்காரம் எனப்படுகிறது. பஞ்சாங்க நமஸ்காரம், பொதுவாக பெண்கள் மட்டுமே செய்யகூடிய நமஸ்காரம் ஆகும்.

சாஷ்டாங்க நமஸ்காரம் 
வழிபடுபவர், தமது தலை, கைகள், மார்பு மற்றும் முழந்தாள் ஆகிய அங்கங்கள் பூமியில் படும்படி வழிபாடு செய்வது சாஷ்டாங்க நமஸ்காரம் எனப்படுவது.

அஷ்டாங்க நமஸ்காரம் 








ஒருவர், தமது தலை, காதுகள், கைகள், தோள்கள், முகவாய்க்கட்டை ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் படும்படி வணங்குதல் அஷ்டாங்க நமஸ்காரம் ஆகிறது.

சாஷ்டாங்க நமஸ்கார தத்துவம் 
என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை;
எல்லாம் உன் செயல்

என்று இறைவனை சரணாகதி அடைவதே சாஷ்டாங்க நமஸ்காரத்தின் நோக்கமாகும்.

Saturday, 21 September 2013

திருப்பதி கோவிலின் மகிமை, ரகசியம்

பிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள். 


திருப்பதி ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன. அவைகளில் சில.....

1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும்தான் உள்ளன. இந்தப்பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும். இந்த பாறைகளும் ஒரேவிதமானவை

2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக்கொடுக்கும் ஒரு வகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறையில் தடவினால் அந்தப்பாறைகள் வெடிப்பதில்லை. ஏழுமலையானின் திருவுருவச்சிலைக்கு 365 நாட்களும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனால் வெடிப்பதில்லை.
3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஓர் இடத்தில் சிற்ப்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும். உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரப்பாக இருக்கும்.ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலிஷ் போட்டது போல் பளபளப்பாக இருக்கின்றன.

4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக் கொதிக்கின்றன.



திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாக இருக்கின்றன.

1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிகப் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முருக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, ரபாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.
2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டிச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குச் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.
3. ஏழுமலையான் உடை 21 முழு நிளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டுப் பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும். வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும்தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
4. உள்சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும். ஒவ்வெரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு 10 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர்வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.
6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்தும், கஸ்தூரி சைனாவிலிருந்தும், புனுகு பாரிஸ்லிருந்தும் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4.30 மணி முதல் 5.30 மணிவரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவாகும்.
8.ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து ப்க்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலை சுமார் 80 ரூபாய்.
9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போண்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்படுகின்றன.
10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ. 1000 கோடி, இவருடைய நகைகள் வைத்துக்கொள்ள இடமும் இல்லை, சாத்துவதற்க்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகள் செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.
11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை, இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை, பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ 100 கோடி.உ
12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசர் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.
13.ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிரிய விக்கிரகம் கி.பி. 966 ஜுன் 8 ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குருநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டது அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக் கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்தி உள்ளார்.


14.திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

15. வெள்ளி கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்ச்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.
16.சிவராத்திரி அன்று ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெறுமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெறுகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி அந்தப் பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளனர். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமாள் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார் அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர். நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமலையான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.
17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.
18.ஏழுமலையானின் ஸ்தல விருட்சகம் புளிய மரம்.
19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சிலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி, அதானால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால் வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.
20. கி.பி. 1781 ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைசேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுலையானை பிராத்தித்திருக்கிறார். குணமடைந்ததும் ஒரு இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்.
21.ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

22. திருமலையின் புனிதத்தன்மை கருதி கி.பி. 1759 முதல் கி.பி 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத்தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடிபூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடாக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கு வரும் எனக் கவலைப்பட்டார்கள்.
24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.
25. ஏழுலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விட வேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.
25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும் .வடகலை சம்பிரதாயத்தில் "வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யபடும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.
26. கி.பி. 1543 ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோவில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி. 1764ல் நிஜாம் தெளலா என்பவரின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.
27.திருவில்லிபுத்தூர் கோவிலில் இருந்து ஆண்டாள் அணிந்த மாலைகள் திருப்பதி கொண்டு வரப்பட்டு ஏழுமலையானை கடவுளாக வழிப்பட்டு வாழ்த்தி வணங்கிணார்.
28. திருலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை.


இந்தக் கட்டுரை பின்வரும் வலைதளத்திலிருந்து எடுக்கப்பட்டது